Popular Posts

Monday, January 12, 2015

SREE MAHAPERIYAVALIN ARULVAKKU PART III

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு  பாகம் 3
(Continuation of Part 2)



25 02 2014     21
தஞ்சாவூரிலே பெரிய கோவிலை ராஜா கட்டிக்கொண்டிருந்தார். எங்கிருந்தெல்லாமோ சிற்பிகள் வந்து வேலை செய்தார்கள். அங்கே வேலை செய்கிறவர்களுக்கெல்லாம் நீர்மோர் கொடுத்து உதவுகிறாள் ஒரு பாட்டி. ஒரு நாள் அந்த பாட்டி, பிரதான சிற்பிக்கிட்டே என்னிடம் ஒரு கல் இருக்கு. "என்னோட உபயமா கோவில் கட்ட வைத்துக்கொள்கிறீர்களா?" என்று கேட்டாள். "கொண்டு வாருங்கள்" என்று வாங்கிக்கொண்டான் சிற்பி. அந்தக் கல் ரொம்ப நாளா மருந்து உரைச்ச கல்...வழுவழுன்னு இருந்தது. அதைக் கூம்பு மாதிரிப் பண்ணி மேலே வைச்சுட்டான் சிற்பி. கச்சிதமா ஆயிடுத்து. கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிச்சாச்சு. ராஜா சந்தோஷமா சிவபெருமான் கிட்டே "நான் அமைச்சு தந்த கோபுர நிழல்லே விச்சிராந்தியா இருக்கீரா"ன்னு கேட்டான்.   
அன்னிக்கி ராத்திரி சொப்பனத்துலே சுவாமி வந்து "கிழவியம்மா தந்த நிழல்லே ஆனந்தமா இருக்கேன்னார்". ராஜாவுக்கு நித்திரை விலகித்து. தொப்பமா வேர்த்து போச்சு. அடுத்த நாள் சிற்பி கிட்டே போய் "கோபுரத்தை அமைச்சதுலே யாராவது கிழவியம்மா உபகாரம் பண்ணினாளான்னு கேட்டான். ஒரு சின்ன கல்  கொடுத்தா மோர்கார கிழவின்னான் சிற்பி. பாட்டியை அடையாளமும் காட்டினான். கிழவியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்துட்டான் ராஜா. பகவானுக்கு தெரியும். யார் யார் எப்படின்னு...இந்த லோகத்தை படைச்சவன் அவன். நாம் அதுலே ஒரு தூசி. தூசிகள் யார் கண்ணையும் உறுத்தப்படாது.

28 02 2014     22

விநாயகர் மஹிமை
சிவபெருமானைத் தரிசிக்க வருகிறவர்களையெல்லாம் தன்னையும் தரிசிக்கிறார்கள் என்று ஆதிஷேஷனுக்கு கர்வம் வந்துவிட்டது. அவன் லட்சுமணனா அவதாரம் எடுத்தபோதும், பலராமனா முன்னாலே பிறந்தப்பவும் ஆஞ்சநேயரோட மோதவிட்டு ரசிச்சவர் பகவான். ஏன்னா ஆஞ்சநேயனும் நவ வியாகரண பண்டிதன். பதஞ்சலியா வந்தப்போ அவனுக்காக நாட்டியமே ஆடிக்காட்டினார் சோமசுந்தர பெருமான். திரையைப் போட்டுண்டு பாடம் சொல்லி கொடுத்தவருக்கு கர்வம் வந்துவிட்டதை பகவான் புரிஞ்சுண்டு எடுத்து வீசிவிட்டார். தலை மலைப் பாறையிலே அடிபட்டு ஆயிரம் பிளவாயிடுத்து. அது தான் ஆயிரம் தலை. அவனும் மறுபடி பதவி கிடைக்கிறதுக்காக சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தான். நாரதர் தான் உபதேசம் பண்ணினார்.   
பத்து கைகளோடு சிம்ம வாகனத்திலே சித்தி புத்தி கணபதியாக காட்சி தந்து ஒவ்வொரு பிளவையும் ஒரு தலையாக்கினார். உதரபந்தனமா வயிற்றை சுற்றிக் கட்டிண்டு பழைய மரியாதையையும் கிடைக்கும்படி செய்தார்.   

06 03 2014     23
முன்னேறணும்னு நெனைக்கறது தப்பில்லே. முயற்சி பண்ணணும். பகவானை நினைக்கணும். இப்படி ஒடிண்டே இருந்தா எப்போ பகவானை நெனைப்பே? யாரப் பார்த்தாலும் நேரமில்லேங்கறா. குழந்தைகள், சம்சாரம்னு எல்லோரும் வெளியே போயிடறா. கிரஹஸ்தன் தனியா இருக்கான். என்னடா பண்ணலாம்னு யோசிக்கறான். போன் பண்ணி சிநேகிதனை வரவழைச்சு சீட்டு விளையாடலாமா? இல்லே க்ளப்புக்குப் போகலாமான்னு யோஜனை ஓடறதே ஒழிய கையை காலை அலம்பிண்டு ஸஹஸ்ரநாமம் படிக்கலாம்னு தோன்றதில்லே. திருவிழாக் காரியங்களை இழுத்து போட்டுண்டு செய்யாட்டாலும் முடிஞ்ச வரை ஒத்தாசை செய்யலாமே. நாலு கால் சேர்ந்தா பந்தல். அது போல நாலு நல்லாவா ஒண்ணு சேர்ந்தா நல்ல காரியம் நடக்கும்.

09 03 2014    24

ஒரு மஹான் ஒரு நவரத்ன வியாபாரியோட கிரஹத்திலே பிக்க்ஷை ஏத்துக்க ஒத்துண்டார். பூஜை முடிந்தது. நைவேத்தியம், தீபாராதனை, அன்னதானம் எல்லாம் முடிஞ்சு வியாபாரியும் மஹானும் மட்டும் தனியா இருக்கா. மஹான் கேட்கிறார். "உனக்கு கற்களில் தோஷம் பார்க்கத் தெரியுமா?" "தெரியும் சுவாமி" பவ்யமாக பதில் சொன்னான் வியாபாரி. "தோஷமான கல்லை என்ன செய்வே?" மஹானோட அடுத்த கேள்வி. "நம்ப கடையிலே கல் வாங்கிட்டு பாதகம் ஏற்பட்டா ஜனங்க நம்மளை நம்புவாங்களா? அதனாலே தோஷமான கல்லை ஒதுக்கிடுவேன்" கைகட்டி வாய் புதைத்து பதில் சொன்னான். "இன்னிக்கு அன்னம் ரொம்ப நன்னா இருந்தது. அரிசி மூட்டை என்ன விலை?" இன்னொரு கேள்வி. "நம்ம நிலத்துலே வெளஞ்சது சுவாமி! ரொம்ப உயர்ந்த ரகம். உங்களைப் போல் மாஹான்கள் சாப்பிடற விஷயத்திலே நான் மத்தவாளை நம்பறதில்லே..காய்கறிகளும் அப்படித்தான். சொத்தை, அழுகல் இல்லாமே நானே பார்த்து வாங்கினேன்."
மௌனமாய் கேட்டு கொண்டிருந்தார் மஹான். அவன் பேசி முடிந்ததும்- "அது போலத்தான் அர்ச்சனைப் பூக்களும். வில்வத்திலேயும், துளசியிலேயும் எத்தனை ஓட்டை தெரியுமா? நெறைய அழுகல் பூ இருந்தது. இவன் வீட்டு பூஜையில் தோஷமுள்ள பூக்கள் தான் இருக்கும் என்று பகவான் நினைக்க மாட்டாரா? தேவதைகள் நம்ப வேண்டாமா! பகவானோட நெருக்கத்தை நாடறவா எல்லாத்திலேயும் கவனமா இருக்கணும்" என்றார்.  

11.03.2014   25

செயலற்ற நிலை தம்மொருவரை மட்டும் குறித்த விஷயம். செயல் என்று ஏற்பட்டுவிட்டால் அது பிறரையும் குறித்த விஷயமாகும். செயல் என்று உண்டாகும்போது அந்தச் செயலை புரிபவர் இருப்பதோடு, அச்செயலின் விளைவுக்கு ஆளாகும் ஒருவரும் இருக்கத்‌தான் வேண்டும். நீங்கள் எதைச் செய்தாலும் அதற்கு அன்பு ஒன்றே ஆதாரமாக இருக்க வேண்டும். அன்பின்மீதே செயல்படும்போதுதான் செயல் புரிபவர், அச்செயலால் பாதிக்கப்படுகிறவர் ஆகிய இருவருக்கும் நன்மை விளையும். அன்பே செயலின் ஆதாரம் எனும்போது நான் காந்திய அஹிம்சைத் தத்துவத்தை குறிக்கவில்லை. அஹிம்சைக்கு மாறுபட்ட நடவடிக்கைகள் தேவைப்படுகிற சந்தர்ப்பங்களும் உண்டு. போர்கள் புரிவதற்குக்கூட அவசியம் ஏற்படலாம். ஆயினும் செயலின் தோற்றம் ஹிம்சையாயினும் சரி, அஹிம்சையாயினும் சரி, அச்செயலைப் புரிகிறவனுடைய உள்ளத்தில் அன்பு இருக்க வேண்டும். விருப்பு, வெறுப்பு, கோபம், தீய எண்ணம் இவற்றை அறவே களைந்துவிட்டு அன்பொன்றையே எல்லாச் செயல்களுக்கும் வழிகாட்டியாகக் கொண்டோமாயின் உலகத் தீமைகளில் பெரும்பாலானவை மறைந்தே போகும். இதுவே பாரதத்தின் ஞானிகளும் முனிவர்களும் உலகுக்கு தந்த உபதேசம்.

14.03.2014   26
கர்மாவைப் பண்ணி பூமியிலே ஜெனனமெடுத்த எல்லா சரீரத்திலேயும் பகவான் தன் சக்தியை வைச்சுதான் அனுப்பறார். பாவி, அப்பாவின்னெல்லாம் பாக்கிறதில்லே. மழையும், பனியும், சூரியனும், சந்திரனும், காற்றும் மாதிரிதான் பகவத்கிருபையும். ஏரி, குளம், கிணறு வெட்டினா ஊரில் மழை பெய்யறச்சே நிரம்பறது. பக்தி என்ற குளத்தை, கிணறைத் தோண்டி வைச்சுக்கணும்.
வெய்யிலில் வடாம், அப்பளம், ஊறுகாய் போட்டு உலர்த்தி வைச்சுக்கறா. தீய நெனைப்புகளை தினமும் சூரிய நமஸ்காரம் செய்கிறபோது அழிச்சிடணும். எலிக்கு தினமும் பல் வளர்ந்துண்டே இருக்கும். அது தினமும் எதிலாவது ராவி குறைச்சுக்கும். இல்லேனா எலியின் பற்கள் எலியைவிட பெரிசாக வளர்ந்து பார்க்கவே பயங்கரமாகிவிடும். எலியின் பல் மாதிரி தான் மனசிலே வளருகிற குரோதங்களும். பகவன் நாமாவிலே அதை உரசிக் அப்பப்போ குறைச்சிக்கணும்.   

17 03 2014   27

கசியபரோட பத்தினிகள் கத்ருவும் வினதையும். கத்ருவுக்கு நாகங்கள் பிறந்தன. வினதையின் கரு இரண்டு ஜாடீகளில் இருந்தது. அவசரப்பட்டு திறந்ததாலே அருணன் முடவனானன். சூரியனுக்கு தேரோட்டியானான். 'அவசரப்படாதே! ஜாடீ தானே வெடித்து தம்பி வந்தா உன் கஷ்டம் தீரும்னா'. ஜாடீ வெடிச்சு கருடன் வந்தான். சப்தரிஷிகளிலே ஒருத்தரான கிருதுவோட பிள்ளைகள் வாலகில்யர்கள். கட்டை விரல் அளவு பருமன் உயரம். ஆனா 60000 பேர்கள். ஒரே மரத்திலே தலைகீழே தவம் செய்தவா. மஹா தேஜஸ்விகள்! நாம கட்டை விரல் அளவுக்கு இருக்கோம்னு நினைக்காம கஸ்யப முனிவரோட யாகத்துக்கு சமித்து சேகரிச்சுக் கொடுத்தா. ஆளுக்கு இரண்டுன்னாலும் லட்சத்து இருபதாயிரமாச்சே. கருடன் ஒரு சமயம் வாலகில்யர்கள் தவம் பண்ணின மரத்திலே உட்கார்ந்தான். மரக்கிளை முறிந்த சத்தம். அதுலே தொங்கிண்டிருந்த முனி குமாரர்களை அப்படியே தாங்கி கந்தமாதன பர்வதத்துலே கொண்டுவிட்டான். கிருது புத்திரர்கள் சந்தோஷப்பட்டு தங்களோட தவப்பயனை எல்லாம் கருடனுக்கு கொடுத்துட்டா. கருடன் அதனாலே தான் இந்திரனை ஜெயிச்சு அம்ருதம் கொண்டுவந்து தாயாரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டான்.
நமக்கு தெரியாம தப்பு நடந்துடலாம். அதுக்கு என்ன நிவர்தின்னு யோசிச்சு செய்யறதை விட்டுட்டு அதிலேர்ந்து தப்பிக்க நினைக்கிறது பாவம். பகவான் பார்த்துண்டே இருப்பார். கருடன் பறந்து போயிருந்தா தவப்பயன் கிடைக்குமா? பகவானையே சுமக்கற பலம் தான் வருமா? அதனாலே சோம்பேறித்தனத்தையும், பயத்தையும் விட்டுட்டு யோசிச்சு செயல்பட்டோம்னா பாதி பிரச்சனைகள் பறந்துபோயிடும்.

20 03 2014    28
சூரியன் அஸ்தமிக்கிற அதே நேரத்திலே சந்திரன் வர்ற நாளைத்தான் பௌர்ணமிங்கறோம். மூணாம்பிறை அதாவது அமாவாசை கழிஞ்ச திரிதியை அன்னிக்கு சந்திரனோட பிரகாசத்தை விசுவேதேவர்கள் கிரஹிச்சுக்கறா. அதனாலே மூன்றாம்பிறையைப் பார்க்கிற வாரிசுகள் மேலே அவளோட பார்வைபடறது. அவா ஆசீர்வாதம் கிடைக்கும். அதனாலேதான் மூனாம்பிறையைப் பார்க்கணும்னு ஏற்படுத்தி வைச்சிருக்கா. பஞ்சமி சந்திரனைத் தரிசனம் பண்ணினா ஜலரோகங்கள் வராது. வந்திருந்தவாளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும். நவமி சந்திரனைப் பார்க்கும்படி ஏற்பட்டால், சிவனை தரிசனம் பண்ணனும். வளர்பிறை தசமியன்னிக்கு சந்திர தரிசனம் பண்ணினால் வியாதிகள் குணமாகும். திரியோதசி சந்திரன் ஐஸ்வர்யத்தைக் கொடுப்பார். ஏன்னா அன்னிக்கு குபேரன் சந்திரக் கலையிலுள்ள அம்ருதத்தை  ஆகர்ஷிச்சுகிறார். அமாவாசைக்கு முந்தின ராத்திரி பிதுர்க்கள் சந்திர கலையை பருகறா. அதனாலே தான் பூலோகத்துக்குப் பக்கத்திலே வந்திருக்கிற பிதுர்க்களுக்கு மறுநாள் காலையிலே தர்ப்பணம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிக்கறோம்.

23.03.2014    29

இராம அவதாரத்திலே அனுமாருக்கு அவரோட பலத்தை ஞாபகப்படுத்தின ஜாம்பவான், சஞ்சீவி பேரையெல்லாம் சொன்னவர். ராமரை மாப்பிள்ளையாக்கிக்கணும்னு ஆசைப்பட்டார். இந்த ஜென்மாவுலே முடியாது, அடுத்த ஜென்மத்துலே உன் ஆசையை நிறைவேத்தறேன்னார் ராமர். அந்த ஜாம்பவான் அமிர்தம் கடையவே ஒத்தாசை பண்ணினவர். அதனாலேதான் ரொம்ப பழைய சாமானை ஜாம்பவான் காலத்ததுன்னு சொல்ற வழக்கம் வந்தது. அந்த ஜாம்பவான் கிருஷ்ணர் காலத்திலேயும் இருக்கார். சிங்கத்தோட சண்டைபோட்டு ஜெயிச்சு மணியைக் கொண்டுவந்து தன் பிள்ளையோட தொட்டிலுக்கு மேலே கட்டினார். தாதா உக்கிரசேனருக்காக அந்த மணியைக் கொடுன்னு ஒரு தடவை கிருஷ்ணர் கேட்டார். தம்பியைக் கொன்று அந்த மணியை ஏன் கிருஷ்ணரே எடுத்துண்டிருக்கக்கூடாதுன்னு ராஜா சத்ராஜித் புலம்பினார். ஊரிலேயும் இதே பேச்சு. பழியைத் துடைக்கறத்துக்காக கிருஷ்ணர் ஒரு சின்ன படையோட காட்டுக்கு போனார். பிரசேனன், அவன் ஏறிண்டு வந்த குதிரை இரண்டும் செத்து கிடந்தது. அங்கிருந்த சிங்கத்தோட காலடியைத் தொடர்ந்து நடந்தார். கொஞ்ச தூரத்திலே சிங்கமும் செத்து கிடந்தது. பக்கத்திலே கரடி காலடி இருந்தது. மணி அங்கேயும் அகப்படலே. கரடியோட காலடியைத் தொடர்ந்தார். கரடியோட குகை வாசல்லே கூட வந்தவாளை நிறுத்திட்டு தான் மட்டும் உள்ளே போனார். ஏழெட்டு நாள் கழிஞ்சதும் கூட வந்தவா கிருஷ்ணர் செத்துட்டார்னு துவாரகைக்கு திரும்பி போயிட்டா. ஒருத்தருக்கு கூட உள்ளே போய் பார்க்கிற தைரியம் இல்லே. சுயநலம் எப்பவுமே நல்லது செய்யாது. இராமாயணத்திலே சுக்ரீவன் வாலி செத்துட்டான்னு குகை வாசலை மூடினான். இங்கே அப்படி செய்யல்லே. இருபத்தோரு நாள் சண்டை நடந்து ஜாம்பவான் சரணாகதியடைஞ்சுட்டார். பகவான் ராமனாக காட்சி தந்தார். ஜாம்பவான் தன்னோட பெண்ணை ஜாம்பவதியை அவருக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து சியமந்தக மணியோட அனுப்பினார்.  
கிருஷ்ணர் ராஜாகிட்டே "உயர்ந்த பொருளை பத்திரமாக வைச்சுக்கணும். இனிமேலாவது பொறுப்பில்லாதவா கிட்டே கொடுத்துட்டு அப்பாவி மேலே பழி போடாதேன்னார்".     

26 03 2014   30 


'சூரியன் பிறந்தான்' என்று யாரும் சொல்றதில்லே! ஏன்னா தினமும் தோன்றும் சூரியன் புதுசா பிறக்கறதில்லே. நேற்று மாலை மறைஞ்சவன் இதோ மறுபடியும் உதித்துவிட்டான். அதுபோல சனத்குமாரனாக இருந்து வேதாந்தங்களை கரைச்சுக்குடித்தவன், ப்ரம்மண்யத்தை வளர்க்க சுப்ரமண்யமாக அவதரிச்சான். 'சு' என்றாலே சுபம், சுகம் என்று அர்த்தம். 'கந்தம்' என்றால் வாசனை. சுகந்தம் என்றால் வாசனை மேலும் சிறப்படைகிறது. ப்ரமண்யத்திற்கு விஷேஷத்தை தந்ததால் கார்த்திகேயன் சுப்ரமண்யனானான். சுப்ரமண்யரின் அவதாரம் தான் ஞான சம்பந்தர். "வேத வேள்வியை நீந்தனை செய்துழல் ஆதாமிமல்லியமண்" என்றும் மறை வழக்கமிலா மாபாவியர்" என்றும் சம்பந்தரே சொல்லியிருக்கிற சமணர்களை வென்று வைதீகத்தையும் சைவத்தையும் நிலைநாட்டத்தான் அவர் அவதாரம் பண்ணினார். இல்லாட்டா அம்பாள் அவருக்கு பால் கொடுத்திருப்பாளா?
ப்ரம்யண்யத்தை-வைதீக தர்மத்தை வாழ வைப்பதை லட்சியமாகக் கொண்டதினால் தான் 'வாழ்க அந்தணர்' என்கிற தேவாரப் பாடலால் சமணரை ஜெயித்தார். சமணர்கள் 'விப்ரக்ஷயம்'ன்னு எழுதி ஆற்றில் போட்டார்கள். விப்ரக்ஷயம் என்றால் பிராமணன் ஒழிக என்று அர்த்தம். அதை வெள்ளம் அடித்து கொண்டு போயிற்று. சம்பந்த பெருமான் 'வாழ்க அந்தணர்' என்று ஆரம்பிக்கும் பாடலை எழுதிப் போட்டார். ப்ராம்மண்யம் இருந்தால்தான் லோகத்துக்கு க்ஷேமம்னு அவர் திட்டவட்டமாக நினைச்சார். அதற்காக யாகம் செய்துண்டு வேதம் ஓதிண்டு இருக்கறவா மட்டும் நன்னா இருக்கணும்னு நினைச்சாரா? "வையகமும் துயர் நீங்கவே"ன்னு முடிக்கிறார். எல்லாரும் க்ஷேமமாயிருக்கணுங்கறது தான் அவர் நோக்கம்.

(CONTINUED in Part IV)

MAHAPERIYAVALIN ARUL VAKKU - PART II

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு 
PART II (Continuation of Part I)



31 01 2014   11
அந்நிய நிலத்தில் மேயக்கூடாது என்பதற்காகப் பசுவைக் கட்டி போடுகிறோம். அந்த நிலத்தின் பயிர் சேதம் ஆகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மட்டும் கட்டிப்போடுவதில்லை. பசு அடிபடாமல் இருக்கவேண்டும் என்று அதைக் காக்கவே கட்டிப்போடுகிறோம். இவ்வாறே எல்லா சமயக் கட்டுப்பாடுகளும் நாம் பிறருக்கு இன்னல் விளைவிக்காமல் காப்பாற்றுவதோடு நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும் விதிக்கப்பட்டவை. முக்கியமாக, நம்மை நம்மிடமிருந்தே காப்பாற்ற விதிக்கப்பட்டவை. 

01 02 2014   12
மரீசின்னு ஒரு ரிஷி. பார்வதியே பெண்ணா பிறக்கணும்னு தவசிருந்தார். விநாயகர் அப்படியே நடக்கும் என்று வரம் கொடுத்தார். ஒரு நாள் மரீசி முனிவர் யமுனையில் குளிக்க வந்தபோது ஒரு தாமரைப் பூவிலே சங்கு இருப்பதைக் கண்டு நதியில் இறங்கினார். கிட்ட நெருங்கின பிறகுதான் அது சங்கு வடிவிலிருந்த குழந்தை என்று தெரிந்துகொண்டார். வலிமையான அந்தக் குழந்தைதான் வல்லபை. பிள்ளையாரின் உடம்பில் புகுந்து கொண்டார் சிவன். மனிதர்களுக்கு வல்லப சக்தியை தர பகவானை மணந்துகொண்டாள் வல்லப சக்தி. எல்லா தேவியரும் இடப்பக்கம் இருந்தால் வலது பக்கம் இடம் கேட்டு பெற்றுகொண்டாள் வல்லபை. வள்ளியை முருகன் மணம்புரிய உதவியவரும் கஜானனன் தான்!
அதனால் கணேசரை பூஜித்தால் மும்மூர்த்திகளும், முப்பெருந்தேவியரும், குமரக் கடவுளும் சந்தோஷமடைந்து சகல நன்மைகளும் தருவார்கள். 

04 02 2014   13
கோவில்லே போய் கோலம் போட்டா, பக்தாளெல்லாம் கொண்டாடறா. தேவதைகளெல்லாம் ஆசீர்வாதம் பண்றா. சொல்ற புத்திமதியை மேடை போட்டுச் சொன்னா ஜனங்களெல்லாம் புகழறா. அச்சுலே பார்த்தா அத்தனை பேரும் பரவசப்படறா. ஏன்னா நல்லது லோகமெல்லாம் பரவணும். ஒருத்தருக்கு சிரமம்னா கை கொடுக்க நானிருக்கேன்னு ஓடி வரணும். அப்பத்தான் பகவானோட நெருக்கத்தை அனுபவிக்க முடியும்.

06 02 2014    14
வலது கை சாப்பிடறது. நல்ல சங்கீதத்துக்கு தாளம் போடறது. பிரசாதம் வாங்கறது. இடது கை தோட்டி வேலை செய்யறது. பெரியவர்களின் பாதத்திலே விழும்போது இரண்டு கையும் தான் பாதத்தை புடிச்சிக்கிறது. இரண்டு கையும் தான் கற்பூரம் ஒத்திக்கறது. பளு தூக்கும்போது இடது கை வேண்டியிருக்கு. அதனாலே எந்த வேலை செய்யறதும் கேவலமில்லே. நல்லவாளுக்கு சம அந்தஸ்து, உரிமை கொடுத்து உதவி செய்யணும் என்கிறதை பகவான் எவ்வளவு எளிமையாக சொல்லி இருக்கார்.

11.02.2014  15
ஒருத்தர் சொன்னார். 'அபிஷேகம் பண்ணினா விக்ரஹம் பாசி பிடிச்சிடறது. அழுக்கு சேர்றது. புளிபோட்டு தேய்க்கணும்... வீட்டுலே மடி சஞ்சின்னு கேலி பண்றா. அதனாலே வெறும் அர்ச்சனை நைவேத்தியம் தான்' ...
இப்போ குளிர் பெட்டி, ஃபேன், டெலிவிஷன்னு எத்தனையோ நல்ல சமாச்சாரங்கள் வசதிக்காக வீட்டுலே வந்துடுத்து. அதையெல்லாம் அடிக்கடி தூசி தட்டி சுத்தமாக வைச்சுக்கலையா? அது போல தானே இதுவும். வசதியிருக்கிறவா அஞ்சு ரூபாய் கொடுத்தா படங்களையும் சுத்தமாக துடைத்து விட்டுப்போறான்.
எந்த குறையும் வராம பேன் அடியிலே டெலிவிஷன் பார்க்கணமேங்கற பயம் ஒவ்வொருத்தருக்கும் அடி மனசுலே இருக்கு. அதுக்காக ராமர், கிருஷ்ணர், சிவன், அம்பாள், முருகன், கணபதின்னு ஏகப்பட்ட படம் மாட்டி வைச்சிருக்கா. ஆனா படத்துமேலே இருக்கற ஒட்டடைய விஷேஷ நாள்ளேதான் தொடைக்கறா. அத்தனை சுவாமிக்கும் ரெண்டு வாழைப்பழம் நைவேத்தியம் காண்பிச்சா போதுமா?

13.02.2014    16
இருப்பது ஒரே சூரியன் தான். ஆனால் கையிலே கொஞ்சம் ஜலத்தை எடுத்துக்கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் தெளித்தால் ஒவ்வொரு முத்து ஜலத்திலும் பிரதிபிம்பமாக ஒரு சூரியன் தெரிகிறது. பிரித்து பிரித்து இப்படிப் பல பிரதிபிம்ப சூரியன்கள் இருந்தாலும் உண்மையில் இருப்பது ஒரு சூரியன் தான். இப்படியே எல்லாவற்றுக்கும் மூலமாக ஒரே சக்திதான். நம்மெல்லோரிடமும் பிரிந்து பிரிந்து பல போல் தோன்றுகிறது.

16 02 2014    17
சமூகத்துக்கோ, ராஜ்யத்துக்கோ, ஒரு வர்கத்துக்கோ தலைவர்களாக  இருப்பவர்கள் சமய அனுஷ்டானங்களையும் ஆசரணைகளையும் புறக்கணிக்கலாகாது. தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு சமய சடங்குகள் தேவையாக இல்லாதிருக்கலாம். ஆன்மீகத்தில் அவர்கள் முன்னேற்றம் கண்டு சமய அனுஷ்டானங்களை பின்பற்றும் அவசியத்தை கடந்திருக்கலாம். என்றாலும் அவர்கள் அனுஷ்டானங்களை விட்டுவிட்டால், இந்த அனுஷ்டானங்களின் உதவியை உண்மையாகப் பெறவேண்டிய நிலையிலுள்ள மற்ற மக்களும் இவற்றை அலட்சியம் செய்ய தொடங்கிவிடுவர். இதனால் தலைவர்கள் மக்களுக்குத் தவறான உதாரணம் காட்டியதாகவே ஆகும். மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அங்கிருந்தே அவர்களை முன்னுக்கு அழைத்து செல்ல வேண்டியது தலைவர்களின் கடமையாகும்.  

18 02 2014   18
நமக்கு வேதமே அறிவை ஊட்டி நல்வழி காட்டுகிறது. அது அனாதி. அது கூறிய அன்பினால் தான் நம் மதம் வளர்ந்தது. நமது மதத்திலுள்ள சிறந்த தத்துவங்களைக் கண்டு பலர் நம் மதத்தை தழுவுகின்றனர். நாம் ஸ்கூல், ஆஸ்பத்திரி, மிஷன் பிரச்சாரக் கூட்டம் ஏற்படுத்தவில்லை. யாரையும் அழைக்கவில்லை.
நமக்கு வேதமே ஆணிவேர், அனுஷ்டானமே இலை, பூ, காய், கனி. ஜனன மரணமற்ற முக்தியே ரஸாநுபவமாம்.  

20 02 2014    19
அரிவாள்மணை, சுத்தி இவற்றிடையே கவனமா இல்லேன்னா கையை வெட்டிடும். ஸ்கூட்டர், கார்லே பிரயாணம்  பண்றச்சே நெனைப்பு வேறெங்கையோ போனா விபத்து நடந்துடும். அடுப்புக்கிட்டே கவனக்குறைவா இருந்தா தீப்புடிச்சுடும். ஆனா பகவான் ஞாபகம் இல்லாம வாய் ஸ்லோக மந்திரத்தை முணுமுணுத்தா போறும்னு நினைக்கலாமா? சுவாமியை நினைச்சிண்டு 'சம்போ மகாதேவா, நமோ நாராயணா' ன்னு சொன்னாலே போதுமே.
உங்க குழந்தை உண்மையை சொல்றான்! நல்லவனா இருக்கான்னா உங்க மனசு எப்படி எத்தனை சந்தோஷப்படறது?  
எல்லோரும் பகவானோட குழந்தைகள். நியாயமா நடக்கறவாளை நேர்மையா காலட்ஷேபம் பண்றவாளை பகவானுக்கு பிடிக்கும். நம்மை ஊனமில்லாம படைச்சு, நல்லபடி வாழ வழி காட்டின பகவானுக்கு நாம எப்படி நன்றி செலுத்தறது.     
புதுப் பூவைப் பார்த்தா பகவானுக்குத் தரணும்னு ஆசை வரணும். தளதளன்னு இருக்கற சந்தனத்தை பகவானுக்குப் பூசிப் பார்க்கணும்னு நெனைப்பு வரணும். இந்த புடவையிலே அம்பாள் எப்படி இருபாள்னு நெனைச்சு தியானம் பண்ணினாலே கருணை செய்கிறவளாச்சே! சுடச் சுடப்பால் குடிச்சா நெஞ்சிலே இருக்கற பகவானுக்கு வெந்துடும்னு ஆத்திக் குடிச்ச பக்தாலெல்லாம் இருக்கா. பகவானை மனசாலே நெருக்கமாக்கிக்கணும். வார்த்தையாலே மட்டும் போறாது. 
23 02 2014    20
கழுதை மேலே உப்புப்பொதி ஏத்திண்டு சந்தைக்குப் புறப்பட்டான் வியாபாரி. திடீர்னு மேகங்கள் கூடிண்டு மழை கொட்டித் தள்ளித்து. உப்பு பொதி நனைந்து பாதிக்கு மேல் வீணாகிவிட்டது. "இராத்திரிலே பெய்யப்படாதா? பகவான் ரொம்பத்தான் சோதிக்கிறார்" என்று வருத்தபட்டான் உப்பு வியாபாரி. ஊர் வெளியே காட்டிலே கொள்ளைக் கூட்டம் சூழ்ந்து கொண்டு "எடு பணத்தை" என்று அங்கு வந்த சில வியாபாரிகளை மிரட்டினார்கள். சுடுகிறதற்காக துப்பாக்கியை எடுத்தார்கள். அந்த காலத்தில் வெடிமருந்து கெட்டித்து சுடுவார்கள். இப்போ மாதிரி குண்டு கிடையாது. அந்த வெடி மருந்து பட்டாசு மாதிரி மழை பெய்தால் நமுத்துவிடும். சுடாது. துப்பாக்கி சுடாதலால் திருடர்கள் ஓட்டம் பிடித்தார்கள். மழை பெய்ய வைத்த பகவானை எல்லா வியாபாரிகளும் கொண்டாடினார்கள். அறிந்த உப்பு வியாபாரி கடவுளிடம் மனசுக்குள் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.
(continued in Part III..)

Sunday, January 11, 2015

SREE MAHAPERIYAVALIN ARUL VAKKU - PART I

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு 
As I had opined in Sage of Kanchi, the group in Facebook, I have started posting in my blog from today the 11th January 2015.


12 01 2014 முதல் இது வரை எழுதி வந்த மஹாபெரியவாளின் அருள்வாக்கு இன்றுடன் 108 பூர்த்தியாகிறது. முன்பே கூறியிருந்தபடி என்னிடம் உள்ள பல புத்தகங்களிலிருந்து எனக்கு பிடித்தவற்றை ஸேஜ் ஆஃப் காஞ்சியில் (Facebook group) பதிவு செய்து வந்தேன். இம்முயற்சிக்கு ஆதரவு அளித்த எல்லோருக்கும் என் நமஸ்காரங்கள். இந்த 108 ஐயும் தொகுத்து இன்னும் ஒரு வாரத்தில் என்னுடைய
blog-ல் பதிவு செய்ய உள்ளேன் --sarayutoayodhya.blogspot.in

An interesting thing emerged during this is that several passages in new books by recent authors claiming copyright find a place even in books printed in 1960s by other institutions.
நன்றியும் நமஸ்காரங்களும்.
ramachandranvenkataraman
Bottom of Form

படிப்பதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பக்கத்தில் பத்து என்று 11 பாகங்களாக 108 -  ஐ பிரித்து பதிவு செய்துள்ளேன்.

PART I

12 01 2014    1
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு 
இப்பொழுது லோகம் முழுவதிலும் பஞ்சம். ஆயினும் சாத்தியப்படும் வரையில் பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். அதுதான் பரம லாபம். பொருள், உடல், மனம், வாக்கு இவைகளை கொடுக்க வேண்டும். இந்த ஒற்றுமை இருந்தால், எவ்வளவு பேதமிருந்தாலும் அந்தரங்க அன்பிருக்கும். பணம் வெளிப்பிராணன்; வெளியில் சஞ்சாரம் செய்வது அது. அதையும் கொடுக்க வேண்டும். தினமும் அஞ்சு நிமிஷம் பகவான் நாமா ஸ்மரணம் செய்யுங்கள். ஒவ்வொருவரும் சிறிது தர்மம் செய்தால் லோகத்தில் பல ஜனங்களின் கஷ்டம் நிவர்த்தியாகிவிடும். ஆயிரம் பெயர் சொன்னால் மட்டும் போதாது. பொருளினாலும் பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டும்.

13 01 2014      2
கல்லைத் தூக்கி சமுதிரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனால் மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல்லை ஏற்றினாலும் மூழ்கறதில்லே. கவலைகள் கற்கள் மாதிரி. பகவான் தெப்பம் மாதிரி. மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பமாக்கணும். தெப்பத்தை இணைக்கிற ஆணிகள் தான் பூஜை மந்திரங்கள் எல்லாம். அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சாரசாகரத்தில் மூழ்கடிக்கபடாமல் கரை சேர்ந்துவிடலாம். 

14 01 2014     3
உள்ளத்தில் துக்கமோ பக்தியோ அதிகமானால் கண்ணால் ஜலம் வழிகிறது. கோபம் வந்தால் உதடு துடிக்கிறது. மனத்திற்கும் கண்ணுக்கும் உதடுக்கும் சம்பந்தம் இருப்பதால். உள்ளே ஏற்படுகின்ற உணர்ச்சிக்கு ஏற்ப வெளியே சில காரியங்கள் ஏற்படுகின்றன. இதையே திருப்பி வைத்து பார்த்தால் வெளியே செய்கின்ற சில சம்ஸ்காரங்களினால் உள்ளே சில மாறுதல்கள் உண்டாகின்றன. பக்தி வரவேண்டும், சாந்தம் வரவேண்டும், சக்தி வரவேண்டும் என்றால் வெளியே சில சின்னங்களை போட்டு கொள்ளவேண்டும் என்று பெரியோர்கள் சொன்னார்கள். இவை எல்லாம் வெளி வேஷங்கள் என்று நினைத்தால் வெறும் வேஷமாகப் போய் விடுகின்றன. 'ஆத்மார்த்தமாக ஜீவனைப் பரிசுத்தம் செய்து கொள்வதற்காக' என்று நினைத்தால் சத்தியமாக உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது. புறச்சின்னங்கள் ஆத்மாவிற்கு உபயோகப்படுகின்றன.  

15.01.2014    4

ஒரு பெரிய குளம். அதனடியில் சேறு நிறைந்த ஒரு சுரைக்குடுக்கை கிடக்கிறது. அக்குடுக்கை அடியில் கிடப்பதற்குக் காரணம் அதில் நிறைந்திருக்கும் சேறுதான். அச்சேற்றை எடுக்க எடுக்க அக்குடுக்கை மேலே வரும். அப்படியே மனதிலிருக்கும் அழுக்கை அப்புறப்படுத்தி அதை சுத்தப்படுத்தினால் அதுவும் மேலே வரும். ஹ்ருதயமாகிற சிம்மாதனத்தில் பகவானை உட்கார்த்தி வைப்பதற்க்கு அச்சிம்மாஸனம் சுத்தமாக இருக்க வேண்டும். அசுத்தமாக இருக்கக்கூடாது. கெட்ட எண்ணங்களாகிற அசுத்தத்தால் ஹ்ருதயம் ஆக்கிரமிக்கப்படாமலிருக்க வேண்டும்.  

16.01.2014    5
சிலாதர் என்று ஒரு ரிஷி சின்ன வயசில் பிட்சைப் பாத்திரத்தில் கல்லை போட்டுவிட்டார். குருடனான பிட்சாண்டியும் கல்லைச் சேர்த்து சாப்பிட்டு விட்டான். அந்த சிறுகல் தான் யமலோகத்தில் பாறையாக வளர்ந்திருந்தது. அவர் இறந்த பிறகு பொடித்து சாப்பிட வேண்டும் என்று அறிந்தார் சிலாதர். பூலோகத்திலேயே அப்படி ஒரு பாறையைத் தேர்ந்தெடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து குடித்து விட்டார். யமலோகப் பாறை காணாமல் போயிற்று. ஏகாதசி துவதாசி நாட்களில் விரதமிருந்து நாமும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பாவத்தை கரைத்து விட முடியும்.
காய்கறி   வெட்டறோம். புழு சாகறது. நமக்காக சமையல் செய்யறவா சுட்டுக்கொன்ன அந்த பாவத்தில் சாப்பிடுகிற எல்லோருக்கும் பங்குண்டு. அவசரமாக போகிறோம். கால் மிதி பட்டு எறும்புகள் சாகறது. முட்ட வருகிற பசுவை கோபத்தில் அடிக்க வேண்டி வரும். அடுப்பில் உள்ள பால் தீய்ந்தாலே பாபம், அது மாட்டின் உதிரம். பூப்பறிக்கும்போது மொட்டுகளையும் காய்பறிக்கும்போது பிஞ்சுகளையும் பறிப்பது பாபம். இவை குவிந்து போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

17.01.2014     6
மறுநாள் பட்டினியாச்சேனு முதல் நாள் தசமி அன்னிக்கு திணியத் திணியச் சாப்பிடக்கூடாது. ஏகாதசி அன்று லேசான ஆகாரமா, சுத்த ஆகாரமா பகல் ஒரு வேளை சாப்பிட்டு இராத்திரி பாலும் பழமும் மட்டும் எடுத்துக்கணும். அதேமாதிரி ஏகாதாசிக்கு மறுநாள் வயிற்றுக்கு நிறைய வேலை தரக்கூடாது. அகத்தி புண்பட்ட வயிற்றை ஆற்றும். நெல்லிக்காய், சுண்டைக்காயெல்லாம் கட்டாயம் சேர்த்துக்கணும். துவாதசி அன்று யாராவது ஒரு ஏழைக்கு அன்னம் போடுகிறது நல்லது. நம்மாலேயும் ஒருத்தர் பசியைத் தீர்க்க முடிகிறதே என்கின்ற சந்தோஷம் உண்டாகும். ஏகாதசி அன்னிக்கு பரநிந்தை பண்ணக்கூடாது. சாந்தமாயிருக்கணும். பகவான் நாமாவைச் சொல்ற நாக்கு கெட்ட வார்த்தை பேச அனுமதிக்காம அடக்கி வைக்கணும். பெரிய ஏகாதசி அன்னிக்கு சந்தனம் பூசிக்க கூடாது. தாம்பூலம் போட்டுக்க கூடாது என்பா. ஏன்? இதெல்லாம் மற்ற பக்தர்களோட மனசைக் கலைக்கலாம். விரத நாளிலே ஏன் பாவம் பண்ணனும்!

18.01.2014    7

 
நெல்லு மூட்டையாக்கட்டி களஞ்சியத்துக்குப் போறதேன்னு பூமி அழறதில்லே. மனுஷன் அழறான். ஜீவன் தன் கடமையை முடிச்சுண்டு பரலோகம் போறது! எல்லோரும் ஒரு நாள் போகறவாதான். தங்கறவா யாரு? கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். நெல்லு மட்டும் களஞ்சியத்துலேயே இருக்க முடியுமா? மூணு வருஷம் கழிஞ்சா விதைக்கு கூட ஆகாது. கோவிலுக்கு, நல்ல மனிதர்களுக்கு, உணவாப் போற நெல்லு மாதிரி, புண்ணியம் பண்றவா....சாதாரண மனுஷாளுக்கு உணவாகர நெல்லு பாபம்-புண்ணியம் ரெண்டையும் பண்றாப்போல. வயலிலே, அரைக்கிற எடத்துலே கீழே சிந்தற நெல்லைப் போல- களையறச்சே சிந்தற அரிசி, சாவியாப்போற அரிசி, புழுக்கட்டிப் போனது- இது மாதிரிதான் மனுஷாள்ளேயும் இருக்கா. சாவியா போன அரிசியா மனுஷா இருக்கப்படாது.  

19.01.2014   8

இந்த காலத்தில் 'டின்னெர்' நடத்துகிறார்கள். 'டோஸ்ட் ப்ரபோஸ்' பண்ணுகிறார்கள். 'உன்னுடைய சுகத்திற்காக நான் சாப்பிடுகிறேன்' என்று சொல்லிக்கொண்டு ஒருவன் சாப்பிடுகிறான். 'சாப்பிடுகிறவன் இவன். அது இவனுக்குத்தானே புஷ்டி தரும்? இன்னொருவனுடைய சுகத்துக்காக சாப்பிடுவதாகச் சொல்லிவிட்டால், அந்த இன்னொருவனுக்கு எப்படி புஷ்டி கிடைக்கும்?' என்று கேட்கலாமா?
இதெல்லாம் ஒரு மனோபாவம். இந்த மனோபாவமே இன்னொருவனுக்கு புஷ்டி கொடுக்கிறது. இப்படியே யாகங்களில் நாம் அக்னியில் போடுகின்ற ஆஹூதிகள், அவிசுகள் யாவும் தேவதைகளுக்கு சக்தி கொடுக்கின்றன. இவ்வாறு பாவித்து நாம் யக்ஞம் செய்தால் தேவர்களும் அப்படியே பாவித்து நமக்கு அநுக்கிரகம் செய்வார்கள்.  

21 01 2014      8
ஒரு பட்டணத்துலே ஒரு பெரிய ஆஸ்பத்திரி. அங்கே உடம்பெல்லாம் வெந்து கத்‌திண்டு இருக்கற ஒரு நோயாளியை கொண்டு வரா. இன்னொரு வண்டி வரது. அதிலே மாடி படியிலேயிருந்து தவறி விழுந்து நினைவு தப்பிப் போன ஆள் வரார். அடுத்து விபத்து நடந்து இரத்தம்  சொட்ட ஒருத்தரை கொண்டுவரா. இதுல காய்ச்சல், தலைவலி போன்ற சின்ன உபாதைகளோடு வரவா கிட்ட சின்ன டாக்டர் தான் நிப்பா. அதுக்காக வைத்திய சாலையிலே அலட்சியம் பண்றான்னு அர்த்தம் பண்ணிக்கலாமா? உன்னைவிட அவசியமானவாளுக்கு பகவான் ஓடிக்கொண்டிருக்கார். அவசரமா கவனிக்க வேண்டியவா யாருன்னு பகவானுக்கு தெரியாதா?

25 01 2014    9

வெள்ளைச் சர்க்கரை; தண்ணீர் கலக்காத பால்; அக்னி அதுக்குண்டான பாத்திரங்கள். இது இருந்தா எல்லோராலேயும் ருசியான பால்கோவா கிண்டிட முடியுமா? எத்தனை பேர் கவனக்குறைவா அடிப்பற்ற விட்டுடறா? எத்தனை பேர் இனிப்பை குறைச்சலா போட்டுடறா? திகட்டி அலுத்துப் போகிற மாதிரியும் சில பேர் பண்ணிடறா. பல பேர் அஜாக்கிரதையா பாலையே கொட்டிடறா! சிலபேருக்குப் பாறைமாதிரி அமைஞ்சுடறது. பயந்துபோய் முன்னாலேயே இறக்கிக் களகளன்னும் ஆகிவிடறது.   
அக்னி தான் ஆத்மா. அது எல்லாரிடத்திலும் ஒரே மாதிரி தான். உபகரணங்கள் தான் தாய், தந்தை, மனையாள், புத்திராள் என்கிற சூழ்நிலை. பால் போல மனசை ஆக்கிக்கணும். எல்லாருக்கும் இனிப்பானவனா, உபகாரம் செய்யறவனா வாழறது தான் வாழ்க்கை. பாலையும், இனிப்பையும் படைச்ச பகவான் அதைக் கறுப்பாக்கச் சொல்லி அவரா சொன்னார்? மனுஷாளோட அசிரத்தை தான் காரணம்.
ஒரு தடவை தப்பாயிடுதுங்கறத்துக்காக மேலே மேலே தவறு செய்யப்படாது. தீய்ஞ்சு போயிடுத்துன்னா மேலா எடுத்துடணும். அப்போ எல்லாம் வீணாகாது. பாலும் சர்க்கரையும் நல்லது தான். அதுக்காக அதிகமா சேர்த்துண்டா அவஸ்தையாயிடும். எதுவும் அளவோட இருக்கறது தான் பக்குவம்.     


இன்று பிரதோஷம் (28 01 2014)    10
எங்கும் பிரதோஷ காலத்தில் சிவன் நடனம் செய்கிறார். விஷேஷமாக சிதம்பரத்தில் நடராஜரது நர்த்தனம் மிக ஆனந்தமானது. வ்யாக்ரபாதர் புலி, பதஞ்சலி பாம்பு. பயங்கரமான இவைகளுக்கும் நடனம் இன்பம் அளிக்கிறது. நந்திக்கு கொம்பும் கால்களுமுண்டு. வ்யாக்ரபாதருக்கு கால்களுண்டு. பதஞ்சலிக்கு இரண்டுமில்லை. கண்ணும் காதும் அவருக்கு ஒன்றே. கண்ணை மூடினால் காது கேளாது. நடராஜ தாண்டவத்தை அவர் நன்கு அனுபவிப்பவர். சதா தியானம் செய்பவர். அவர் நடராஜ நடனத்திற்கு ஏற்ப 8 ஸ்லோகம் இயற்றினார். அவரைப் போல் அவைகளுக்கும் -- தீ, தா -- என்ற கொம்பும் காலுமில்லை. ஸ்ரீ மடத்திலும் பிரதோஷ காலத்தில் அந்த பாராயணம் நடக்கிறது. மாலையில் சிவசேவை செய். ஆனந்தமுண்டாகும் (ஸதஞ்சித.........ஹ்ருதிபஜ)
............ continued to Part II

Tuesday, August 19, 2014

INVESTEC TEST SERIES INDIA vs ENGLAND - future team will be

INVESTEC TEST MATCH SERIES IN ENGLAND

India's series with England on a 5 test match in England was just completed on 17th August and two of the matches ended just in 3 days.   The visitors started the series with the first test at Trent Bridge, Nottingam with a draw and won the second test at Lords with 95 runs.  The third test at Southampton gave the impeteus to England to level with India at 1-1, with a win by 266 runs.   The fourth at Old Trafford and the fifth at Oval were lost by India by an innings and thus the whole story of 5 test of the series, tells how a team which drew first, won the home team in second, gave up the lead in the third and meekly surrendered in the fourth and fifth.

As usual the former cricketers wanting the coach to be replaced, the captain Dhoni to be replaced too are vociferous.   A dispassionate analysis of the matches will bring out the following:

1.   After England levelled the series in the 3rd test, Indians never scored even 200 in an innings and the runs started lesser and lesser as they progressed towards 5th test.
2.   The captain was forthright in his reasoning for the loss of the series as he said they have not even competed.

3.   The youngsters in the team who are more used to one day and T20 matches could not cope up with the demand of 5 day cricket.  No one wanted to stay when there were difficulties in batting with a steady bowling by Anderson and Broad.  
4.   There inadequacies were all the more exposed, with a cloudy morning or a rain affected pitch and when the England bowlers swung on a good length.   5.   While Bhuvanesh Kumar was accurate, his speed of 125-130 Kmph, was easily negotiated by the English batsmen.  But he still among the wickets. Aaron who came in 4th and 5th test though bowled with guile was erratic and gave away runs and when the team wanted that to be economical. Ishant sharma could not be fully utilised but definitely showed that his experience was handy for the captain when he gave the least of the runs in the 5th test.   Shami should have been utilised, though he was not at his best.  Why should there be coaches, if they could not correct his deficiencies or they could not foresee his inability at England.   This applies to the captain too.
6.   The batsmen who used to slog, the tail enders Sharma and Ashwin proved that batting was not a difficulty.  Even though they scored lesser runs in the 5th test, they showed character and batted well against the speedsters of England.  Bowler Ashwin should have been in the team from 3rd test onwards.  You reserve Jadeja for one dayers and T20s.   In his place take another spinner, an understudy to Ashwin.
7.   The top order batsmen have totally failed without giving a start in the matches in which we have fared badly.   While Vijay tried his best to remain, some more application is required in playing the away going ball and rotating of strike which was not seen at all, given priority.  Negotiating the ball in the "V" was not seen from the top order batsmen and all their catches were taken at slips by England.   Too many edges by these men, merely resulted in a catching practice at slips for English team.  
8.   These top order men also made 'hero' of Moeen Ali.  He bowled in right areas but a total surrender of the Indian batsmen to this bowling was atrocious.  
9.   Fielding was good though catches were dropped, dime a dozen, in the 5th test in slips and the Indian speedsters lost their sheen because of this.  In this case Dhoni is no exception, as he also contributed his part.  At 32, Dhoni who is also desirous of handing over the mantle to somebody, India should think of a captain and also a wicket keeper for tests.   It need not necessarily be that a captain should be the same for all formats and keeping this is mind, Kholi be kept for one dayers and T20 and a new captain for Tests.  Dhoni can play under Kholi in T20s.
10.  Overall, the top order batsmen have to contribute in overseas conditions and the team selection should be based on that.  The left hand-right hand combination for the opening pair is to be maintained and Dhawan deserves a relook.  Vijay, Rahane and Rohit should be kept in the team and Pujara will have to work well to be back in the team.   Speedsters Ishant sharma, Bhuvanesh Kumar, Aaron and Shami should be given extended time in test matches and Binny should be retained in the team to use him when there is a problem of fitness of other players. He should be retained in the team for his batting too.   A new wicket keeper, Dinesh Karthik or Noman Ojha can be tried.  Specialist slip fielder is a necessity if spinners have to be successful and Vijay, Rahane and Rohit should be trained for that.  Aswin, vijay, Rohit Sharma to be slip fielders Rahane should fulfil the task of short-leg for both speedsters and spinners as required.  Only tall persons should be in slip catching positions for speedsters and hence Shami after bowling should be utilised here and should be trained in close catching.  Throws to reach from boundaries and half way mark, Ishant Sharma, bhuvanesh kumar, Binny, Aaron should come in handy and necessary practice sessions should be had for that purpose.

Thus the team gets formed:
Vijay, Dhawan, Rohit, Dinesh Karthik, Rahane, Binny, Aswin, Ishant, Bhuvanesh, Aaron and Shami.
Reserve:  Chetesh Pujara, Normon Ojha, Karan sharma (Any other spinner) and Pankaj singh.


This team has to perfrom and a new Indian Coach who has no pretentions that earlier teams were due to improper selection, is required with separate fielding and bowling coaches.  For sometime, foreign coaches need not train indian team and the players who were trained by different foreign coaches would do.  Suitable alterations have to be made without disturbing the test squad while selecting men for one dayers and T20.

Friday, July 11, 2014

BRAHMAPUREESWARAR TEMPLE, TIRUPATTUR

BRAHMAPUREESWARAR TEMPLE, TIRUPATTUR
TIRUPATTUR - Where Brahma has a separate Sannidhi



Tirupattur :   திருபட்டூர் -  Approximately 35 kms from Tiruchirapalli (Tiruchy)--   Brahma   lost the fifth head due to the curse of Lord Siva (loosing the tejas and thus power of creation).     After extensive prayers and installing 12 siva lingas in Titupattur temple, the boon he got from Siva, that his fate will be changed and that those who worship Brahma in this temple, Brahma will be doing the same on his devotees.  In Tamil, “Vidhi Iruppin vidhi kootti arulvay” was supposed to have been told by Siva to Brahma, i.e., for whomsoever the fate could be blessed for the better, bless those.

Brahma of Tirupattur temple:



               


You can reach Tirupattur, which is 10 kms from Samayapuram (5 kms diversion from Siruganur on the trichy-chennai highway and Perambalur route) by Tiruchy- Perambalur bus and also a town bus.       It takes approximately 45 minutes to an hour.       The temple is opened at 7.30 am and upto 1 pm in the morning and is opened at 4pm and upto 8pm in the evening.     Thursdays and Sundays are busy days for the temple.    Guru’s Adidevatha is brahma.  The shops in front of the temple sell flowers and also lotus to be offered to Brahma.  The Rajagopuram faces the east and is of 5 stages.    On entering, you see the Kodimara and then the Nandhi under the Rudraksha mantap.  This mantap is known as Vedha Mandapam.    The inner mantapa known as Nadha Mantapa houses the sapthaswara pillars.    You cross this mantap and dwara palakas and enter to have the blessings of Lord Siva who showered his blessings on Brahma known as Brahmapureeswarar.

The  main deities are Brahmapureeswarar, Brahmasampathgowri and Brahma.   Lord ganesha is in sanctum sanctorium of both Siva and Brahma.     The general belief of devotees is that Brahma does not have temples.   But the truth is that there is no temple of Siva without brahma, as he is present on the left hand side of Siva, from where the abhiseka theertham comes.    On the south of Nadha mantapa, a large sized brahma faces east.   The brahmasampathgowri temple is adjacent and on the northern side of kodimara and the goddess was prayed by brahma and the goddess bestowed the tejas back to Brahma and thus the power of creation and hence called brahmasampthgowri.  The Murugan,Valli and Deivayanai Sannadhi is behind the sannadhi of Brahma.   Other deities are mahavishnu, gajalakshmi, durga, sapthamadhas, Dakshinamurthy and Navagraha.

The Twelve Siva Lingas installed by Brahma are:
1.       Sri Brhamapureeswarar                                (Moola sthanam)
2.       Sri Pazhamalai nathar                                   (opp to Pathanjali munivar sannadhi)
3.       Sri Pathala Iswarar                                        (Near to Chandikeswarar)
4.       Sri Thayumanavar                                         (Northern side of goddess sannadhi)
5.       Sri Mandooganathar                                      (Northern side of goodess sannadhi)
6.       Sri Ekambareswarar                                      (Northern side of goddess sannadhi)
7.       Sri Arunachaleswarar                                    (Northern side of goddess sannadhi)
8.       Sri Kailasanathar                                           (Northern side of goddess sannadhi)
9.       Sri Jambukeswarar                                        (Northern side of goddess sannadhi)
10.   Sri Kalathinathar                                              (Northern side of goddess sannadhi)
11.   Sri Saptharishiswarar                                       (Northern side of goddess sannadhi)
12.   Sri Suddha Rathineswarar                               (Near Navagraha)
On the southern side of kodimara is Pathanjali Munivar.       He is the one who gave ‘Yoga Sutra’  and also called as ‘Nithya kaingaryal’ as he prays daily the Brahmapureeswarar of this temple.
The Sthala Viruksha of this temple is Makizha maram.  This is on the northern side of the goddess sannnadhi and is believed to be of 150 years old.    The theerthas in the temple are: 1. Brahma theertham  2.  Bahula theertham   3.  Shanmuga river.     Brahma theertham is the one from which the water was taken by Brahma for abhisekam of the dwadasa lingams.  Bahula theertham is outside the temple, 150 metres away.    Shanmugha river is on the eastern side of the temple, 500 metres away, and flows from north to south and hence considered equal to River Ganges.

 Abhishekam to Lord Brahma
On all days except thursday            8 am

      On Thursday                                       6 am       

Tuesday, July 08, 2014

SAYANA EKADASI 08 07 2014

SAYANA EKADASI 08 07 2014

Sayana Ekadasi falls on 15 07 2016 this year.




Devasayani Ekadasi, also known as Sayana Ekadashi, occurs during the shukla paksha (waxing phase of moon) of Ashada month (June – July) - The importance of Sayana Ekadasi was explained to Sage Narada by Lord Brahma. Lord Krishna narrated about the greatness of it to Yudhisthira, the eldest of the Pandavas. The glory of Devasayani is mentioned in the Bhavisyottara Purana.
It is believed that those who observe this Ekadashi is blessed with peace and happiness. Even hearing about it is considered highly auspicious. Interestingly, Devasayani Ekadashi is observed as a mark of pure devotion and there is not desire or fulfillment of material gains.

In Surya Vamsam, there was a king Mandhata known for his fairness and upholding of truth. There was a severe drought in his country once and all his poojas, vratas and homas did not bring in prosperity. On the advice of Sage Angira, the king observed the Ashada month sukla paksha ekadasi vrata which gave peace and prosperity.

Vishnu falls asleep in Ksheersagar - cosmic ocean of milk - on Shesha nāga, the cosmic serpent. Thus the day is also called Dev-Shayani Ekadashi  or Hari-shayani Ekadashi  or Shayana Ekadashi.

Vishnu finally awakens from his slumber four months later on Prabodhini Ekadashi - eleventh day of bright fortnight in the Hindu month Kartik (October–November). This period is known as Chaturmas (lit. "four months") and coincides with the rainy season. Thus, Shayani Ekadashi is the beginning of Chaturmas. Devotees start observing the Chaturmas vrata (vow) to please Vishnu on this day.
Sayana Ekadasi falls today in 2014

23 rd July 2018 is the day of sayana Ekadasi in 2018.