Popular Posts

Wednesday, June 15, 2016

உறங்கினால் தானே விழித்துக் கொள்ள

உறங்கினால் தானே விழித்துக் கொள்ள 





உறக்கம் எனக்கில்லை என அழுது புரளும் மாந்தர்காள் 
சற்றே மனக்கவலை விட்டு இயற்கையை ரசியுங்கள்!     

மனத்தூய்மை சிறப்புற்று நல் உள்ளத்தோர் 
கசடு சிறிதுமின்றி துடைத்திட்ட எண்ணத்தோர் 
மனக்கவலைதனை பூட்டிவைத்து உறங்கிடுவர் 
காண பொறாமை கொள்வதேன் உறக்கமில்லோரே!
பொய் புரட்டு பேசாதோர் நேர்மை சிறப்புற்றோர் 
பொறுமை கடைப்பிடித்து கடமை செய்திடுவோர்
நட்பின் இடுக்கண் விரைந்தே களைவித்தோர்

இனிய நித்ராதேவியின் அருட் புதல்வராவோர்! 

அலுக்கி குலுக்கி அயராது வாய் பேசி 
சிணக்கு பிணக்கு அம்பலத்தில் வந்து பேசி  
எள் இலா செய்தியும் வீதிக்கு வ்ந்துரைத்தீர் மாந்தர்
தம் மனஅமைதி, உறக்கம் தொலைத்திட்டீர்!   

மனஉளைச்சல் நீண்டு படபடப்பு வந்திட்டு
செய்வதறியாது நீர் நிற்கையிலே திகைத்திட்டு 
கதைகேட்ட மக்கள் கூட்டம் கைகொட்டிச் சிரித்திடவே 
உண்மை நட்பிணோர் உதவிடுவர் நீர் வெட்கிடவே!

வாழ்வில் சில காலமே இருந்தும் வண்ணத்து பூச்சிகளாய்  
சிறகடித்து பறந்திடுவீர் பூக்கள் எழில் ரசித்திடுவீர் 

இறைவனின் படைப்பினில் இயற்கையின் அழகினராய்   
நம் வாழ்வும் அழகெனவே ஒய்யாரம் கொண்டிடுவீர்!

இனி கூடி நிற்போர் இனம் கண்டு கொள்வீர் 
உறங்கினால் தானே விழித்துக்கொள்ள என புலம்பாதீர்
மற்றவர் உறக்கத்தை நல் உள்ளத்தோடு ரசித்திடுவீர் 

நிம்மதியாய் உறங்கிட்டு ஆரோக்யமும் பெற்றுடுவீர்!





உறக்கம் எனக்கில்லை என அழுது புரளும் மாந்தர்காள் 
சற்றே மனக்கவலை விட்டு இயற்கையை ரசியுங்கள்!   


No comments:

Post a Comment