Popular Posts

Thursday, October 25, 2012

விவாக விவேகம் சரயுவின் கவிதைகள்


விவாக விவேகம்         சரயுவின் கவிதைகள்    வே . ராமச்சந்திரன் 

இருவர் சேர இரு குடும்பங்கள் இரவு பகலாய்
சிந்தித்து, முடிந்தவரை அலசி ஆராய்ந்து 
உறவினர் நண்பர் என பலரிடம் கலந்து பேசி
நல்ல நேரமும் கணித்து செய்த விவாகமானாலும் 
இதில் குற்றம் அதில் குற்றம் என தவறே கண்டு 
சர்ச்சை செய்து நொடிபொழுதில் முடிவு செய்து 
பிரிவதை அன்றாட காட்சியாய் நாம் பார்க்கின்றோம்!

நாங்கள் அப்படியல்ல என்று மார்த்தட்டி, பல வருட
பழக்கத்தின் நட்பு மூலம் தெரிந்துகொண்டோம் 
புரிந்து கொண்டோம் ஒருவரைஒருவர் என்று கூறி 
விவாகமும் புரிந்து கொள்வார்அடுத்து சந்திக்க 
நேர்கையிலே இருவரும் ஒருவராய்
வாழாதது காண்கிறோம்! இவர்களும் பிரிந்தே வாழ்கின்றனர்!

இருவருக்கும் பிடித்தவை எவை என பல 
மணி நேரம் விவாதித்து எடை போடாதீர்!
மக்களே எவைகள் பொருந்தாது பிடிக்காது
(Incomptibilities )
என வரிசையிட்டு அவையில்
பலவற்றை ஏற்று சகித்துக்கொள்ளும் மனப்பாங்கு 
உண்டா என முதலில் காண்பீர்! சம்மதமும் 
பெறுவீர் விவாகத்திற்கு இருவரிடமும்எத்தகைய 
விவாகமும் வெற்றி பெரும் வாய்ப்பதிகம் !!  

2 comments:

  1. "Manathai manaththil araaynthu manamothu manamudithal" seythaal manathodu manam serththu neenda naal manavaazhkai vaazhalaam!

    ReplyDelete
    Replies
    1. vegam irukkum alavukku vivegam iruppathillai. Edhu yetrathai illaiyo, athai manam sakiththu kolven endru uruthi poona vendum.

      Delete